அமித்ஷாவை சந்தித்த உத்தவ்தாக்கரே - மோடி,சோனியாவுடனும் சந்திப்பு

" alt="" aria-hidden="true" />


மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மத்திய உள்துறை-மந்திரி அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்தனர்.

முன்னதாக பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை  உத்தவ் தாக்கரே இன்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “மராட்டிய மாநிலம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடியுடன் ஆலோசனை நடத்தினோம். அதேபோல் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. குறித்தும் மோடியுடன் விவாதித்தோம். சி.ஏ.ஏ. குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. என்.பி.ஆர். என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படபோவது இல்லை. மராட்டிய கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்வோம்” என்று கூறினார்



Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image