60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்

" alt="" aria-hidden="true" />


புதுடெல்லி:

சட்டவிரோத மென்பொருளை (சாப்ட்வேர்) பயன்படுத்தி ஏஜெண்டுகள் பலர் தட்கல் டிக்கெட் எடுப்பதால், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போய் விடுகிறது. இதனால் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் காத்திருக்கும் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.


இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது. இந்த மென்பொருளை முடக்கிய போலீசார், பல்வேறு ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை டிக்கெட் எடுத்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

எனவே பயணிகளுக்கு இனி எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்துள்ளார்


Popular posts
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image